News January 19, 2025
உறவினர்களிடையே தகராறு: 7 பேர் மீது வழக்குப்பதிவு

கடவூர் தாலுகா பள்ளி கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜபாண்டியன் (26). அதே பகுதியைச் சேர்ந்த அருள்ஜோதியை திருமணம் செய்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு 6 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த 16ஆம் தேதி தனது குழந்தையை பார்க்கச் சென்ற ராஜபாண்டியன் குடும்பத்தாரை, அருள்ஜோதியின் தந்தை மாணிக்கம் உள்ளிட்ட 7 பேர் தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர். சிந்தாமணிபட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News March 9, 2026
கரூர்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
கரூரில் திமுகவிற்கு ‘ஷாக்’!

கரூர் மாவட்டம், வடக்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வடிவேல் மற்றும் செல்வம் ஆகியோர் நேற்று திமுகவிலிருந்து விலகினர். பின்னர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது ஏராளான நிர்வாகிகளுடன் இருந்தனர்.
News March 9, 2026
கரூரில் தடை செய்ய கோரிக்கை!

கரூரில் ஆட்டோ தொழிலை பெரிதும் பாதிக்கும் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் . தமிழக அரசே ஆட்டோ தொழிலாளா்களுக்கான தனி ஆன்லைன் செயலியை உருவாக்க வேண்டும். உயா்த்தப்பட்ட எப்.சி, இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும். நல வாரியத்தில் ஆட்டோ தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 3,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும் என சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கம் கோரிக்கை


