News March 22, 2024
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட பணம் பறிமுதல்

ஆண்டிப்பட்டி வ.அண்ணாநகர் அருகே இன்று (மார்.22) மாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்றினை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.82,480 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை, பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பணத்தினை சார் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளதாக தேனி மாவட்ட தேர்தல் அலுவலர் ஷஜீவனா அறிவித்துள்ளார்.
Similar News
News August 16, 2025
தேனி: 96 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் 50,925 முதல் 96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த <
News August 16, 2025
தேனியில் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தேனி தொழிலாளர் நல உதவி ஆணையாளர் ஷியாம் ஷங்கர் விடுத்துள்ள செய்தியில்:- சுதந்திர தின நாளில் விடுமுறை அளிக்காத கடைகள் மற்றும் உணவு நிறுவனங்கள், தொழில் நிலையங்கள் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தியதில் 39 நிறுவனங்கள் விடுமுறை அளிக்காதது தெரிய வந்துள்ளதால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
News August 16, 2025
தேனி: மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி

தேனி மக்களே இந்திய புலனாய்வுத் துறையில் பாதுகாப்பு உதவியாளர் பணிக்கு 4,987 காலிபணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு 10th தேர்ச்சி பெற்றால் போதுமானது. சம்பளம் ரூ.21,700 – ரூ.69,100 வரை வழங்கப்படும். நாளை ஆகஸ்ட் 17ம் தேதி இந்த பணிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள் என்பதால்<