News February 18, 2025
உரிமை பெற்ற பருத்தி விதைகளை பயிரிட வலியுறுத்தல்

திருநெல்வேலி விதை ஆய்வு துணை இயக்குனர் சுஜாதா பாய் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் பருத்தியில் எம்சியூ 5 உள்ளிட்ட ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகளும் விற்பனை செய்யப்படுகின்றன .இந்த வகை பருத்தி விதைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 475 கிராம் பொட்டலம் ரூ.864 விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
Similar News
News December 19, 2025
நெல்லை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருநெல்வேலி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 19, 2025
நெல்லை: ஆன்லைனில் போலி அக்கவுண்ட்., போலீஸ் எச்சரிக்கை

நெல்லை கல்லூரி மாணவி ஒருவர் கமிஷனர் ஆபிசில் சமூக வலைதளத்தில் அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தார். இதுகுறித்து, வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், சமூக வலைதளங்களில் போலி ஐடி-க்கள் உள்ளன எனவும், இந்த ஐ.டி-க்கள் மூலம் குற்றசெயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் துணை கமிஷனர் பிரசன்னா குமார் தெரிவித்துள்ளார்.
News December 19, 2025
நெல்லை: திருடச் சென்ற வீட்டில் குளியல் போட்ட வாலிபர்

மேல பாலாமடையை சேர்ந்தவர் முருகன். இவரது வீட்டில் பட்ட பகலில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (19) என்பவர் அத்துமீறி நுழைந்து பீரோவில் இருந்த மூன்றாயிரம் ரூபாயை திருடியுள்ளார். மேலும், வீட்டில் குளியல் போட்டு, வீட்டிலிருந்த சட்டையையும் அணிந்து கொண்டு சென்று விட்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்தனர்.


