News December 13, 2025
உரிமைத் தொகை உருட்டு எடுபடாது: நயினார்

உரிமைத் தொகை திட்டத்தில், கடந்த 4½ ஆண்டுகளாக தகுதியற்ற மகளிராக இருந்தவர்கள், தேர்தல் நேரத்தில் தடாலடியாக தகுதி உயர்வு பெற்றது எப்படி என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் நேரத்தில் பணத்தாசை காட்டி தமிழகப் பெண்களை வாக்கு வங்கியாக மாற்றலாம் என நினைப்பது நியாயமா என்றும் அவர் X-ல் கேட்டுள்ளார். மேலும், உரிமை தொகை விஷயத்தில் CM ஸ்டாலினின் உருட்டு இனி எடுபடாது எனவும் அவர் சாடியுள்ளார்.
Similar News
News December 13, 2025
இந்தியாவை தலைநிமிர செய்த ஜாம்பவான்கள் PHOTOS

இந்தியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளான ஏவுகணை நாயகன் முதல் சந்திர மனிதன் வரை பலரும், நமது நாட்டை உலகளவில் பெருமையடைய செய்துள்ளனர். இஸ்ரோ, விண்வெளியில் சாதனை படைக்க காரணமாக இருந்தவர்களும் இவர்கள்தான். அந்த ஜாம்பவான்கள் யார்? என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 13, 2025
₹1,000 மகளிர் உரிமை தொகை.. வந்தது மகிழ்ச்சி செய்தி

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 11 லட்சம் பேருக்கு அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பளிப்பது குறித்து CM ஸ்டாலின் முடிவெடுப்பார் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நிராகரிக்கப்பட்டவர்கள் RDO-க்களிடம் மேல்முறையீடு செய்வது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 13, 2025
தனுஷுக்கு பிறகு ஸ்ரேயஸ்? மனம் திறந்த மிருணாள்

தனுஷுடன் கிசுகிசுக்கப்பட்ட மிருணாள் தாகூர், சமீபகாலமாக கிரிக்கெட் வீரர் ஸ்ரேயஸுடன் டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய அவர், ஆரம்பத்தில் இதுபோன்ற விமர்சனங்கள் தனக்கு கடினமாக இருந்தது, ஆனால் தற்போது ‘இவ்வளவு தானே’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். எந்த விமர்சனமும் என்னை பாதிக்காது என்றும் மிருணாள் கூறியுள்ளார்.


