News February 1, 2025
உரங்கள் போதிய இருப்பு உள்ளது: மாவட்ட ஆட்சியர்

சேலம் மாவட்ட விவசாயிகள் மாதாந்திர குறைதீர் கூட்டத்தில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் யூரியா 4,704 மெட்ரிக் டன்னும், டி ஏ பி 2,041 மெட்ரிக் டன்னும், பொட்டாஸ் 5,389 டன்னும், காம்ப்ளக்ஸ் 3902 டன்னும், ஆக மொத்தம் 16,036 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளதாகவும், கடந்த ஆண்டு 1,95,099.6 ஹெக்டர் நிலப்பரப்பு சாகுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Similar News
News July 8, 2025
டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு சேலத்தில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். மேலும் விவரங்களுக்கு <
News July 8, 2025
அடுத்தடுத்து 2 வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

கருப்பூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் தனபால், இன்று மருத்துவமனைக்கு சென்று வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.5,000 பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல், தனபால் வீட்டிற்கு அருகாமையில் உள்ள ரகுநாத் என்பவர் வீட்டிலும் ரூ.5,000 திருடு போனது. அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இந்த சம்பவங்கள் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News July 8, 2025
சேலத்தில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜூலை 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ▶️ உடையாப்பட்டி துணை மின் நிலையம் ▶️மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் ▶️மல்லியக்கரை துணை மின் நிலையம் ▶️கருப்பூர் துணை மின் நிலையம் ▶️நங்கவள்ளி, மேச்சேரி, மேட்டூர் ஆர்.எஸ். துணை மின் நிலையங்களில் நாளை மின் விநியோகம் இருக்காது.SHAREit