News August 7, 2024
உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணை

பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி, புதுச்சேரி கடலோரப் பகுதிகளில், நீச்சல் மற்றும் மீட்புப்பணிகளில் பயிற்சி பெற்ற 39 உயிர் காக்கும் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில், முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி இந்த 39 உயிர் காக்கும் காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
Similar News
News November 5, 2025
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
புதுச்சேரி: VAO பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

புதுச்சேரி தேர்வு அமைப்பின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் VAO மற்றும் கிராம உதவியாளர் பணிகளுக்கு தேர்வானவர்களுக்கான கணினி திறன் தேர்வு கடந்த 2-ம் தேதி நடந்தது. இதன் முடிவுகள் மற்றும் எம்.டி.எஸ் பணிக்கு தேர்வானவர்கள் பட்டியல் நேற்று (நவ.04) வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவலை தேர்வு எழுதிய உங்க நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
News November 5, 2025
புதுச்சேரி: சிறப்பு மருத்துவ முகாம் அறிவிப்பு

புதுச்சேரி சுகாதார மிஷன், சார்பில் தேசிய குழந்தைகள் ஆரோக்கியத் திட்டத்தின் கீழ் சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையால் காரைக்கால் அரசு மருத்துவமனையில், 0-18 வயதுடைய குழந்தைகளுக்கான இலவச இருதய பரிசோதனை முகாம் நவ.21 அன்று நடைபெற உள்ளது. முகாமில் ஏதேனும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் கண்டறியப்பட்டால், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


