News September 1, 2025

உயர்வுக்கு வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக்கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி வழிகாட்டுதல் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 2, 2025

விழுப்புரம் – திருப்பதி ரயில் தற்காலிக இடைநிறுத்தம்

image

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் விழுப்புரம் – திருப்பதி விரைவு(16854) ரயில் சேவை, மேம்பால பணியின் காரணமாக இன்று (செப்.02) முதல் செப்.09ம் தேதி வரை தற்காலிக இடை நிறுத்தம் செய்வதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனினும், இந்த ரயில் சேவை விழுப்புரத்தில் இருந்து காட்பாடி வரை இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணம் மேற்கொள்ளும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.!

News September 1, 2025

விழுப்புரம்: பட்டா விவரங்களை வீட்டில் இருந்தே பார்க்கலாம்

image

விழுப்புரம் மக்களே இனி எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பட்டா மாறுதல் விண்ணப்பிக்க, பட்டா- சிட்டா புலப்பட விவரங்களை பார்வையிட அதை சரி பார்க்க, மேலும் பட்டா விண்ணப்பித்தலின் நிலையை <>இந்த லிங்கில்<<>> சென்று இனி வீட்டில் இருந்தே பார்த்துக்கொள்ளலாம். பட்டா பற்றிய அணைத்து வகையான தகவலும் இந்த இணையத்தில் உள்ளது. இந்த பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 1, 2025

விழுப்புரத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்.

image

விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் நகராட்சி, விக்கிரவாண்டி, கண்டமங்கலம், மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஒன்றியங்களில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மருத்துவக் காப்பீடு, ஆதார் சேவை, இ-சேவை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் இந்த முகாம்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்

error: Content is protected !!