News October 28, 2024

உயர்ந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்

image

தேனி மாவட்டத்தில் பல நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அக்.22ல் 57.91 அடியாக இருந்த வைகை அணை நீர்மட்டம் நேற்று(அக்.27) 59.68 அடியாக உயர்ந்து காணப்பட்டது. (மொத்த உயரம் 71 அடி). மூல வைகை ஆற்றில் இருந்து அணைக்கு வினாடிக்கு 336 கன அடி நீர் சென்றடைகிறது. அணையில் இருந்து மதுரை, தேனி, ஆண்டிபட்டி, சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேறுகிறது.

Similar News

News February 14, 2026

தேனி: 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

தேனி மாவட்டம், ஆசாரிபட்டி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி 12.ம் வகுப்பு படித்து வந்தார். இவர் 11.ம் வகுப்பை விட தற்போது கணித பாடப்பிரிவில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இதனால் மன வருத்தத்தில் இருந்து வந்த மாணவி சில தினங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் நேற்று உயிரிழந்தார். இராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 14, 2026

தேனி: வேன் மோதி சம்பவ இடத்திலேயே பலி

image

போடி, சிலமலையில் மருந்துக் கடை நடத்தி வருபவர் சுனில் (52). இவர் நேற்று முன் தினம் அவரது காரில் கேரளா சென்று விட்டு ஊர் திரும்பியுள்ளார். அப்போது, லோயர்கேம்ப் பகுதியில் சபரிமலைக்கு சென்ற வேன் இவரது காா் மீது மோதியது. இந்த விபத்தில் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். மேலும், வேனில் பயணித்த 4 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து குமுளி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை.

News February 14, 2026

தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

தேனி மாவட்டத்தில் இன்று 13.02.2026 இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!