News November 28, 2024
உயர்தர மின்கம்பங்களை திறந்து வைத்த அமைச்சர்

இராணிப்பேட்டை நகராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இராஜேஸ்வரி திரையரங்கம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் தனியார் நிறுவனங்களின் சமூக பங்களிப்பில் உயர்தர மின்கம்பங்களுடன் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நேற்று அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர்,அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 24, 2025
இரவு ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் -23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு அழைக்கலாம் :9884098100
News August 23, 2025
இரா.பேட்டை: இனி வீட்டில் இருந்தே வரி செலுத்தலாம்…!

இராணிப்பேட்டை மக்களே இனி வீட்டு வரி செலுத்துவது (அ) ரசீது பெறுவது தொடர்பாக அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. <
News August 23, 2025
ராணிப்பேட்டை: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28-ந் தேதி (28/08/2025) காலை 11 மணி முதல் மாலை 5 மணி நேர வரை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறும். விவசாயிகள் தங்கள் பொது மற்றும் தனிநபர் பிரச்சினைகளை கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம் என ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.