News August 9, 2025
உயர்கல்வி சேர மாணவர்களுக்கு உதவித்தொகை காசோலை

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் நேற்று பள்ளிக் கல்வித்துறை சார்பாக சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது பள்ளிக்கல்வித்துறை சார்பாக உயர் கல்வி சேர்வதற்காக மாணவர்களுக்கு 62,000 காசோலையை மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் மாணவர்களுக்கு வழங்கினார். இதில், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 14, 2025
தேனி: மனைவி பிரிவால் இளைஞர் எடுத்த முடிவு

போடி துரைராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தம் (31). இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக அவரது மனைவி கோபித்துக் கொண்டு கணவரை பிரித்து சென்றுள்ளார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்து வந்த சிவானந்தம் நேற்று (நவ.13) மாலை குடிபோதையில் வீட்டிற்கு வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு.
News November 14, 2025
தேனி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

தேனி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க மறக்காம SHARE செய்யுங்க…
News November 14, 2025
வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்

வாக்காளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உதவி மைய முகாம்களானது தேனி மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது பகுதிகளிலே ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.


