News October 11, 2025
உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கடன் வழங்கும் திட்டம் வெளியிட்டுள்ளனர்.விண்ணப்பப் படிவம் இக்கழக இணையதள முகவரியில் (www.tabcedco.tn.gov.in) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் சதிஸ் தகவல்
Similar News
News October 11, 2025
தருமபுரி: புதிய குரலை கேட்க தயாரா…?

தருமபுரி 102.5 F,M நிகழ்ச்சிகளை, சேலம் ஏற்காட்டில் புதிதாக அமையவுள்ள 5 கிலோவாட் டவர் மூலம் ஒலிபரப்ப மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், தருமபுரி மாவட்டத்தின் மலை மறைவுப் பகுதிகளான அரூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களிலும், அண்டை மாவட்டங்களிலும் உள்ள மக்கள் இனி தெளிவாக நிகழ்ச்சிகளைக் கேட்டுப் பயனடையலாம் என பா.ம.க. எம்.எல்.ஏ. வெங்கடேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
News October 11, 2025
தர்மபுரி:1,101 காலியிடங்கள் உடனே அப்பளை பண்ணுங்க

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Trade Apprenticeship Training,raduate Apprenticeship Training போன்ற பதவிகளுக்கு 1,101 வரை காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10,000-15,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்அக்-21குள் <
News October 11, 2025
தருமபுரி: ஆட்சியர் புதிய அறிவிப்பு!

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் தெரிவித்ததாவது; 2025 ஆம் ஆண்டுக்கான பனை விதை நடவு திட்டத்தின் கீழ், மாவட்ட நிர்வாகம், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 வரை மொத்தமாக 8,35,500 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான முக்கியமான கட்டமாக அமையும்.