News August 22, 2025
உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி

திருச்சி, பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் வரும் 25-ம் தேதி நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி முகாம் நடைபெற உள்ளது. எனவே இதில் 12-ம் வகுப்பு பயின்ற உயர்கல்வியில் சேராத மாணவர்கள் கலந்து கொண்டு கல்வி கடன், உதவித்தொகை விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் சரவணன் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
திருச்சி: B.E படித்தவர்களுக்கு ரூ.50,500 சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான BSNL-ல் காலியாக உள்ள Senior Executive Trainee பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 16.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News April 7, 2026
திருச்சி: ஈரோடு பயணிகள் ரயில் பகுதியாக ரத்து

ஈரோட்டில் இருந்து காலை 8:05 மணிக்கு புறப்படும் ஈரோடு – திருச்சி பயணிகள் ரயிலானது வரும் ஏப்.10-ம் தேதி ஒரு நாள் மட்டும், ஈரோடு – திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்து, திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 7, 2026
BREAKING: திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்பு

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய்யின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கில் அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது, வழக்கு உள்ளிட்டவற்றில் குளறுபடி இருப்பதாக சர்ச்சை எழுந்தது. அந்த தவறுகளை திருத்தம் செய்து அவர் மேலும் 2 பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், அவரின் வேட்புமனு திருச்சி கிழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


