News May 25, 2024

உமர் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா

image

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உமர் ஒலியுல்லா தர்காவில் கந்தூரி விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு முதல் நாள் போர்வை போர்த்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து உலக அமைதிக்காகவும் நாட்டில் நல்லாட்சி மலரவும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News

News September 9, 2025

கோவில்பட்டி அருகே விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

image

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கணேசன் (47) என்பவர் தச்சு தொழிலாளியாக உள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த சுமை ஆட்டோ இவர் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 9, 2025

தூத்துக்குடி: உளவுத் துறை வேலை விண்ணப்பிப்பது எப்படி?

image

▶️ உளவுத்துறையில் காலியாக உள்ள 394 பணியிடங்களுக்கு https://www.mha.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம்

▶️ இதில்மாதம் ரூ.25,500 – ரூ.81,100 வரை சம்பளம் வழங்கப்படும்

▶️ BA,BSc,BE,B.TECH படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

▶️ஆன்லைன் தேர்வு, எழுத்துத் தேர்வு,நேர்காணல் என 3 தேர்வுகள் நடைபெறும்.

▶️ விண்ணப்பிக்க செப்.14 கடைசி நாளாகும்

▶️ இதனை வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 9, 2025

கோவில்பட்டி இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி பாராட்டு

image

தமிழ்நாடு அரசு மாவட்ட, மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.

error: Content is protected !!