News August 20, 2025
“உன்னைவிட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல”

சேலம்: சீலநாயக்கன்பட்டி, காஞ்சிநகரையைச் சேர்ந்த சேகர் (84) உடல் நலக் குறைவால் கடந்த ஆகஸ் 18-ஆம் தேதி உயிரிழந்தார். கணவர் உயிரிழந்ததை துக்கத்தில் இருந்த மனைவி யசோதா (74) பேனிக் அட்டாக் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று உயிரிழந்தார். கணவன் மனைவி அடுத்தடுத்த 2 தினங்களில் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 20, 2025
சேலம்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளத்தில் வேலை!

சேலம் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 20, 2025
சேலம் ஆகஸ்ட் 21 நாளை உங்களுடன் ஸ்டாலின்

ஆகஸ்ட் 21 வியாழக்கிழமை நாளை உங்களுடன் ஸ்டாலின் ▶️தாண்டவராயபுரம் தாண்டவராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் ▶️எடப்பாடி நகராட்சி அலுவலகம் எடப்பாடி ▶️செந்தாரப்பட்டி ரெட்டியார் மண்டபம் பஜனைமட தெரு, செந்தாரப்பட்டி ▶️நங்கவள்ளி விசுவாமித்திரர் மல்லிகை மண்டபம் புத்துப்பேட்டை
▶️பெத்தநாயக்கன்பாளையம் ஐஸ்வர்யம் திருமண மஹால் பெரியகிருஷ்ணாபுரம்
▶️ காடையாம்பட்டி ஆர்பிசாரதி தொழில்நுட்பகல்லூரி பூசாரிப்பட்டி
News August 20, 2025
விவசாயிகளே உளுந்து விதை வேண்டுமா? இங்கே போங்க!

சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கையில்சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் எல்லா பருவ காலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற வீரிய ரக வம்பன்-11 உளுந்து விதை விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விதைத்த 90 நாள் முதல், 110 நாள் வரையில் வறட்சி, நோய் தாங்கி வளர்ந்து, ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ வரை மகசூல் தரவல்லது. உளுந்து விதை தேவைப்படுவோர் 9944597160 அழைக்கலாம்.