News August 15, 2025
உத்திரமேரூர் பேரூராட்சிக்கு பரிசு வழங்கிய முதல்வர்

இந்திய நாட்டின் 79வது சுதந்திர தின விழாவை ஒட்டி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கொடியேற்றி வைத்தார். பின், தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்திரமேரூர் பேரூராட்சிக்கு, முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். இவ்விருதை பேரூராட்சித் தலைவர் சசிகுமார் பெற்றுக்கொண்டார்.
Similar News
News August 15, 2025
காஞ்சிபுரம் சிங்கப்பெண்ணுக்கு விருது

பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர். அன்மையில் இவருக்கு மத்தியஅரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்து இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் துளசிமதி முருகேசனுக்கு முதல்வர் ஸ்டாலின், கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார்.
News August 15, 2025
துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது

பேட்மிண்டன் வீராங்கனையான துளசிமதி முருகேசன் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர். 2024-ம் ஆண்டு பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றைப் படைத்தவர். இவருக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்நிலையில் தலைமைச் செயலகக் கோட்டையில் நடைபெற்ற சுதந்திர திருநாள் விழாவில் துளசிமதி முருகேசனுக்கு, முதல்வர் கல்பனா சாவ்லா விருது வழங்கி கௌரவித்தார்.
News August 15, 2025
FLASH: பரந்தூர் விமான நிலையம் அமைவதை எதிர்த்து தீர்மானம்!

பரந்தூரில் விமானம் நிலையம் அமைக்க 2022-ம் ஆண்டு அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து ஏகனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஆக.15) நடந்த கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதை எதிர்த்து 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை பற்றிய உங்கள் கருத்து என்ன?