News March 1, 2026
உத்திரமேரூரில் போட்டியிட எம்.எல்.ஏ சுந்தர் மனு

தமிழகம் முழுவதும் ஓரிரு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது . இந்நிலையில், பல்வேறு கட்சிகளில் இருந்து விருப்பமனுக்கள பெறப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு தற்போது எம்எல்ஏ ஆக உள்ள சுந்தர், மீண்டும் போட்டியிட திமுக அலுவலகத்தில் தனது ஆதரவாளர்களோடு சென்று விருப்பமான தாக்கல் செய்துள்ளார்.
Similar News
News March 1, 2026
காஞ்சிபுரம்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
காஞ்சிபுரத்தில் மனைவியை தாக்கியவர் கைது!

சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனி(45). ஆட்டோ டிரைவரான இவருடைய மனைவி சுகந்தி(38). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனைவியை கத்தியால் வெட்டிய வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு, வெளியே வந்த பழனி, மீண்டும் மனைவி மீது சந்தேகப்பட்டு இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில், பழனியை போலீசார் கைது செய்தனர்.
News March 1, 2026
காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

படப்பை அடுத்த சாலமங்கலம் , முருகன் தெருவைச் சேர்ந்தவர் அம்மாயி(65). இவர் சாலமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தூய்மைத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று(பிப்.28) படப்பை மேம்பாலம் கீழ் நடந்து வரும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் அம்மாயி மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதித்த போது, ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.


