News August 24, 2025
உத்தமபாளையம்: சிறுமிக்கு குழந்தை வாலிபர் மீது போக்சோ

பெரியகுளம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பெற்றோர் இல்லை. சிறுமியின் உறவினரான கம்பம் சுரேஷ் பாண்டி (23). என்பவர் சிறுமியை காதலிப்பதாக கூறி வீட்டில் வைத்து கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமிக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து கம்பம் ஊர்நல அலுவலர் முருகேஸ்வரி அளித்த புகாரில் உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் சுரேஷ் பாண்டி போக்சோ பிரிவில் வழக்கு (ஆக.23) பதிவு.
Similar News
News August 24, 2025
தேனியில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தேனியில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
▶️தேனி மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04546-291566
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News August 24, 2025
தேனி: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு

தேனியில் ஏழை எளிய பெண்கள் பயன்பெறும் நோக்கில் 4 திருமண உதவித் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதில் பட்டப்படிப்பை முடித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரமும், பட்டப்படிப்பு முடிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது<
News August 24, 2025
ஆண்டிபட்டியில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. ஒரு இடம் காலி தலைவராக தி.மு.கவைச் சார்ந்த சந்திரகலா இருந்து வருகிறார். இவர் மீது தி.மு.க அதிருப்தியாளர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். ரகசிய வாக்கெடுப்பில் கவுன்சிலர்கள் யாரும் முன்வராததால் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தன.