News May 11, 2024
உதவி பேராசிரியர் தேர்வு: விண்ணப்ப தேதி நீடிப்பு

உதவி பேராசிரியர் பணிக்கான டி.என்.செட் தேர்வு ஜூன் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஏப்ரல் 30 என நெல்லை பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்த தேதியை தற்போது மே 15ஆம் தேதி மாலை 5 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என பல்கலைக்கழகச் பதிவாளர் சாக்ரடீஸ் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 16, 2025
நெல்லை வழியாக சென்னைக்கு ஏசி ரயில் அறிவிப்பு

தசரா, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி வழியாக சென்னை சென்ட்ரல் செங்கோட்டை இடையே ஏசி பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே இயக்குகிறது. செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை இந்த சிறப்பு ரயில் இரு மார்க்கத்திலும் (06121/06122) இயக்கப்பட உள்ளன. அனைத்து பெட்டிகளும் ஏசி பெட்டியாக இணைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 16, 2025
கவின் கொலை வழக்கு; எஸ்ஐ ஜாமின் மனு இன்று விசாரணை

தூத்துக்குடி, ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் கவின் கடந்த ஜூலை மாதம் கேடிசி நகரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் உதவி ஆய்வாளர் சரவணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இந்நிலையில் ஜாமின் மனு கோரி உதவி ஆய்வாளர் சரவணன் மனுதாக்கல் செய்திருந்தார். நேற்று மற்றும் இன்று அந்த மனு மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
News September 16, 2025
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நெல்லை காவல்துறை அறிவுரை

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஏராளமான மாணவர்கள் ஆட்டோக்களில் பயணம் செய்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். ஆட்டோக்களின் அளவுக்கு மீறி மாணவர்களை ஏற்றி செல்வதாக தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி போக்குவரத்து காவலர்கள் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார். குறிப்பிட்ட அளவிலேயே ஆட்டோகளில் குழந்தைகளை ஏற்றி செல்ல வேண்டும் என அறிவுரை.