News March 31, 2026

உதயநிதி, சபரீசனை அட்டாக் செய்த EPS

image

2 வருடங்களுக்கு முன் அமைச்சர் PTR பேசியதாக ஒரு ஆடியோ லீக் ஆனது. அதில் உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில் தங்கள் மூதாதையரை விட அதிகம் சம்பாதித்துவிட்டனர், சுமார் ₹30,000 கோடியை என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறி வருவதாக இடம்பெற்றிருந்தது. இதனை சிவகாசியில் குறிப்பிட்ட EPS, ஒரே ஆண்டில் ₹30,000 கோடி என்றால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>

Similar News

News April 7, 2026

PM KISSAN அடுத்த தவணை எப்போது?

image

PM KISSAN திட்டத்தின் அடுத்த தவணை ₹2,000 வரவு வைப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தகுதியுள்ள விவசாயிகளை கண்டறிய விவசாயிகள் பதிவு எண் என்ற நடைமுறை நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகளுக்கும் இந்த ‘விவசாயி பதிவு’ மற்றும் தரவுச் சரிபார்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

News April 7, 2026

பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்: ராஜ்நாத் சிங்

image

இந்தியாவுடன் போர் மூண்டால், கொல்கத்தாவை தாக்குவோம் என பாக்., அமைச்சர் குவாஜா பேசியதற்கு ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். பாக்., இதுபோன்ற ஆத்திரமூட்டும் கருத்துக்களை சொல்லக்கூடாது என அவர் கூறியுள்ளார். 55 ஆண்டுகளுக்கு முன்பு பாக்., 2-ஆக பிரிக்கப்பட்டதை நினைவுப்படுத்திய அவர், தற்போது பெங்கால் மீது கைவைத்தால் பாக்., எத்தனை துண்டுகளாகும் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும் எனவும் பேசியுள்ளார்.

News April 7, 2026

தமிழக தேர்தலுக்கு ₹1,302 கோடி ஒதுக்கீடு

image

தமிழக சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்காக ₹1,302 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இந்த தொகையானது 2021 சட்ட தேர்தலுக்கு ஒதுக்கப்பட்டதை விட ₹507 கோடி அதிகமாகும். தமிழகத்தில் 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏப்.13-ம் தேதி துணை ராணுவப் படையினர் கூடுதலாக வரவுள்ளதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!