News March 31, 2026
உதயநிதி, சபரீசனை அட்டாக் செய்த EPS

2 வருடங்களுக்கு முன் அமைச்சர் PTR பேசியதாக ஒரு ஆடியோ லீக் ஆனது. அதில் உதயநிதியும், சபரீசனும் ஒரே வருடத்தில் தங்கள் மூதாதையரை விட அதிகம் சம்பாதித்துவிட்டனர், சுமார் ₹30,000 கோடியை என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறி வருவதாக இடம்பெற்றிருந்தது. இதனை சிவகாசியில் குறிப்பிட்ட EPS, ஒரே ஆண்டில் ₹30,000 கோடி என்றால், 5 ஆண்டுகளில் எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள் என விமர்சித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 9, 2026
இராமேஸ்வரம்:சொந்த ஊர் திரும்பிய மீனவர்கள்

இலங்கை சிறையில் இருந்து விடுதலையான ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். பிப்.19ல் மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். வழக்கை விசாரித்த மன்னார் நீதிமன்றம், மார்ச் 26ல் 5 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது. விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்கள் அங்கிருந்து ராமேஸ்வரம் அழைத்து வரப்பட்டனர்.
News April 9, 2026
தூக்கத்தில்கூட ஸ்டாலின் புலம்புகிறார்: அன்புமணி

வார்த்தைக்கு வார்த்தை பாஜக எனக் கூறி ஸ்டாலின் ஏன் அக்கட்சிக்கு இவ்வளவு பயப்படுகிறார் என்று அன்புமணி கேட்டுள்ளார். ராணிப்பேட்டை பிரசாரத்தில் பேசிய அவர், தூக்கத்தில் கூட பாஜக பாஜக என புலம்பும் ஸ்டாலின், யாராவது தும்மினால் கூட அதற்கும் பாஜகவே காரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் கூட்டணியில் பாஜக உள்ளதால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை EPS பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.
News April 9, 2026
புதுச்சேரியை ஆளப் போவது யார்? தொடங்கும் வாக்குப்பதிவு!

புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மொத்தம் 1,099 வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் இத்தேர்தலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஆளும் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணி, காங்கிரஸ் – திமுக கூட்டணி, தவெக மற்றும் நாதக என 4 முனைப் போட்டி நிலவும் நிலையில், மொத்தம் 294 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர்.


