News August 30, 2025
உதகை: விநாயகர் ஊர்வலத்தினால் வாகனகள் நிறுத்தம் தடை

உதகை நகரில் இன்று (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை (ஆகஸ்ட் 31) விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறுகிறது. இதையடுத்து, சேரிங் கிராஸ், கமர்சியல் சாலை, மார்க்கெட் பகுதி மற்றும் மெயின் பஜார் ஆகிய முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த அனுமதி இல்லை. காவல்துறை இதனை மீறி நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது.
Similar News
News August 31, 2025
நீலகிரி மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

நீலகிரி மாவட்டத்தில் இன்று (31.08.2025) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
News August 31, 2025
நீலகிரி: 12-ம் வகுப்பு போதும்.. ரூ.81,000 சம்பளம்!

நீலகிரி மக்களே, எல்லைப் பாதுகாப்பு படையில் கம்யூனிகேஷன் பிரிவில் உள்ள 1,121 (ரேடியோ அப்ரேட்டர், ரேடியோ மெக்கானிக்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.25,500 முதல் ரூ.81,700 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 31, 2025
நீலகிரியில் நாளை முதல் இரண்டாம் சீசன் துவக்கம்!

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு சுற்றுலா சீசன்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. முதல் சீசன் மார்ச் இறுதி வாரம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரையும், இரண்டாம் சீசன் செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரையும் நடைபெறும். இந்த நிலையில், இரண்டாம் சீசன் நாளை தொடங்குகிறது. இதனால், நாளை முதல் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.