News November 27, 2024

உதகை நகராட்சி புதிய கமிஷனர் ஸ்டான்லி பாபு நியமனம் 

image

தமிழகத்தில் பல்வேறு நகராட்சி கமிஷனர்களை இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. உதகை நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். தற்போது திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார். கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனராக இருந்த ஸ்டான்லி பாபு,  ஊட்டி நகராட்சி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Similar News

News November 14, 2025

நீலகிரி மக்களே அவசியம் பாருங்க!

image

நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் காலங்களில் தேவையான உதவிகள் மற்றும் தகவல்களை பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களின் முழு புள்ளி விபரம், அவசர காலத்தின் போது தேவைக்கேற்ப தங்கும் இடம், உயரம் ஏறுபவர்கள், மரம் வெட்டுபவர்கள், சமூக அமைப்புகளின் தொடர்பு எண்கள் போன்ற பல்வேறு தகவல்களை அறிய இந்த ஒற்றை லிங்கை <>கிளிக் <<>>செய்தால் போதும். யாருக்காவது கண்டிப்பாக உதவும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

உதகை ஏடிசி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

image

உதகை ஏடிசி நடைபாதை பகுதியில் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி தொடங்கியது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

News November 13, 2025

நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

image

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!