News January 29, 2025
உதகை துப்பாக்கி சூட்டில் பலி:13 பேர் கைது

போலீசார் கூறுகையில்,’இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில்,விலங்கை வேட்டையாட நடந்த துப்பாக்கி சூட்டில் ஜெம்ஷித் மீது துப்பாக்கி தோட்டா பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார். அப்போது, அவருடன் சென்ற 4 பேர், அப்பகுதியை சேர்ந்த,9 பேரை அழைத்து,அவர் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக,13 பேர்,கைது செய்யப்பட்டு 3 நாட்டு துப்பாக்கிகள்,2 கார்கள்,தோட்டாக்கள், வெடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 21, 2025
நீலகிரி காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா தலைமையில் இன்று காவலர்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டமானது நடைபெற்றது. இதில் 20க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எடுத்துக் கூறினார்.
News August 21, 2025
போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை தாலுக்கா, குன்னூர் தாலுக்கா, கூடலூர் தாலுக்கா, கோத்தகிரி தாலுக்கா, பந்தலூர் தாலுக்கா, குந்தா தாலுக்கா, போன்ற ஆறு தாலுகாவிலும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் பிரதான சாலைகள் மற்றும் பள்ளிகளில், இன்று நீலகிரி மாவட்ட காவல் துறையின் சார்பாக போக்சோ மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வை அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்தினர்.
News August 21, 2025
நீலகிரி: வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் எப்படி?

மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். நீங்கள் இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம்.ஷேர் பண்ணுங்க!