News January 11, 2026

உதகை அருகே காட்டெருமை தாக்கி பெண் பலி

image

உதகை அருகே கொதுமுடி கிராமத்தில் காட்டெருமை தாக்கி மலர்க்கொடி (45) என்பவர் உயிரிழந்தார். வேலைக்கு செல்லும்போது தேயிலை தோட்டத்தில் இருந்த காட்டெருமை தாக்கியதில் மலர்கொடி சம்பவ இடத்திலேயே பலியாகினார். தொடர்ந்து இப்பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News February 12, 2026

அச்சத்தில் கோத்தகிரி மக்கள்!

image

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மலைப்பாதை வனப்பகுதிகள் நிறைந்த பகுதியாக உள்ளது. தற்போது சமவெளிப் பகுதிகளில் வறட்சி நிலவுவதால் உணவு (ம) தண்ணீர் தேடி மலைப்பகுதிக்கு யானைகள் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோத்தகிரி அருகே தட்டப்பள்ளம் பகுதியில் உள்ள சாலையில் காட்டு யானை ஒன்று உலா வருவதால், அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

News February 12, 2026

நீலகிரி: 2,000 காலியிடங்கள்., ₹29,000 சம்பளம்

image

அஞ்சல் துறையில் 28,740 கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM) & உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன ➤TN-ல் மட்டும் 2,000 காலியிடங்கள் உள்ளன ➤வயது: 18-40 ➤தகுதி: 10th Pass, சைக்கிள் ஓட்ட தெரிய வேண்டும் ➤தேர்வு கிடையாது ➤சம்பளம் BPM: ₹12,000- ₹29,380 வரை. ABPM: ₹10,000- ₹24,470 வரை ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்.14. ➤விண்ணப்பிக்க இங்கே கிளிக் <>செய்யவும்<<>>. SHARE.

News February 12, 2026

நீலகிரி: ஒரே நாளில் 3 பேரை கடித்து குதறிய தெருநாய்

image

நீலகிரி: கூடலூர் காசிம்வயல் பகுதியில் நேற்று ஒரே நாளில் 3 பேரை தெருநாய் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மூவரும் கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் ஏற்கனவே புகார் தெரிவித்த நிலையில், தற்போது இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது. எனவே, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!