News November 25, 2024
உதகை அரசு மருத்துவமனையின் அவல நிலை

உதகை அரசு மருத்துவமனையில் யுபிஎஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் இன்று எக்ஸ்ரே (XRAY) எடுக்க வந்த நோயாளிகளை நாளை வரும்படி மருத்துவமனை ஊழியர்கள் கூறியதால், பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். எனவே, இதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 13, 2025
உதகை ஏடிசி பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

உதகை ஏடிசி நடைபாதை பகுதியில் உதகமண்டலம் நகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில், அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கடைகள் இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றும் பணி தொடங்கியது. இதில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
News November 13, 2025
நீலகிரியில் சிக்கித் தவிக்கும் சிறுத்தை!

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பந்தலூர் பகுதியில் உள்ள தேயிலைத் தோட்ட வேலி கம்பியில் இன்று ஒரு சிறுத்தை சிக்கியது. இந்நிலையில், சிறுத்தையை மீட்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, அதனை பாதுகாப்பாக மீட்டு, அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
News November 13, 2025
கோத்தகிரி அருகே பரபரப்பு: அழுகிய நிலையில் புலி சடலம்!

நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகில் உள்ள கடசோலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்கு, சில மீட்டர்கள் தொலைவில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில், புதிதாக தோண்டப்பட்ட கிணற்றுக்குள், புலியின் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


