News October 16, 2024
உதகையில் புத்தகத் திருவிழா ஆரம்பம்

உதகை புத்தகத் திருவிழா 18.10.2024 முதல் 27.10.2024 வரை
காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இந்த நிகழ்ச்சியில் கலை, இலக்கிய சொற்பொழிவுகள், உணவரங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாணவ மாணவியர்களும் பொதுமக்களும் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்க இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
நீலகிரி: இலவச வீடியோ தொழில்நுட்பம் இலவச பயிற்சி!

நீலகிரி மாவட்டத்தில் பூர்வகுடிகளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, தமிழக அரசின் மூலம் இலவச வீடியோ தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு பயிற்சியானது, தாட்கோ மூலம் வழங்க இருப்பதால் இந்த இலவச பயிற்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் 18 முதல் 30 வயது உள்ளவர்கள் www.thadco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். என மக்கள் தொடர்பு மற்றும் செய்தி துறையின் சார்பாக அறிவித்துள்ளனர்.
News August 15, 2025
உதகையில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் கலைக்கல்லூரி மைதானத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். மேலும் அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளை கௌரவிக்கும் விதமாக பதக்கங்கள், மற்றும் சான்றிதழ்களை, வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டனர்.
News August 15, 2025
காந்தி சிலைக்கு மாலை அணிவித்த ஆட்சியர்

நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், உதகை சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள, காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., இன்று மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் உதகை வருவாய் கோட்டாட்சியர் சதிஷ், உதகை நகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் இருந்தனர்.