News February 24, 2026
உண்மைக்காக குரல் கொடுப்பது குற்றமல்ல: ராகுல்

டெல்லி AI மாநாட்டில் <<19213485>>அமைதி வழியில் போராடிய இளைஞர் காங்கிரசாரை கைது<<>> செய்தது சர்வாதிகார போக்கு, கோழைத்தனத்தின் சான்று என ராகுல்காந்தி சாடியுள்ளார். உண்மைக்காக குரல் கொடுப்பது தேசபக்தி; அது குற்றமல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘சமரசம் செய்துகொண்ட பிரதமருக்கு’ எதிராக, நாட்டின் நலனுக்காக அச்சமின்றி குரல் எழுப்பிய உதய் பானு தலைமையிலான இளைஞர் காங்கிரசாரை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News February 28, 2026
ஊசி நூலில் உலகை அழகாக்குபவர்கள் தினம்!

ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். அரை மனிதனை நேர்த்தியாக நெய்த உடையின் மூலம் முழு மனிதனாக்குபவர்கள் தையல்காரர்கள். சமூகத்தின் அவர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நவீன தையல் இயந்திரத்தை கண்டுபிடித்த வில்லியம் ஏலியஸ் ஹோவின் பிறந்தநாளான பிப். 28-ம் தேதி உலக தையல்காரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஃபேஷன் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, பாரம்பரியத்தையும் பாதுகாப்புக்கும் அவர்களின் பங்களிப்பை போற்றுவோம்!
News February 28, 2026
BREAKING: விஜய்க்கு அடுத்த ஷாக்

இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் காங்.,க்கு எத்தனை தொகுதி என்பது பற்றி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை வந்த கிரிஷ் சோடங்கரிடம், தவெகவுடன் கூட்டணியா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தவெக கூட்டணி குறித்து கேள்வி எழுப்புவது தேவையற்றது என்று பதிலளித்தார். இதனால், தங்களுடன் கூட்டணி வைக்கலாம் என காத்திருந்த விஜய் தரப்புக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
News February 28, 2026
தேமுதிக நழுவியதால் EPS-ன் மாற்று பிளான்

கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தது அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் அன்புமணியின் எதிர்ப்பையும் தாண்டி, ராமதாஸை கூட்டணியில் சேர்க்க EPS-ம் தற்போது விருப்பம் காட்டுகிறாராம். இதனால், இவ்வளவு நாள் தனித்து விடப்பட்ட ராமதாஸிடம் அதிமுக, பாஜகவும் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது. ராமதாஸும் நாளைக்குள் முடிவை அறிவிப்பதாக பதிலளித்திருக்கிறார் என்கின்றனர்.


