News August 14, 2024
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

ஈரோடு பேருந்து நிலையத்தில் உள்ள உணவு கடை, ஜூஸ் கடை மற்றும் பேக்கரி கடைகளில், ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் தங்க விக்னேஷ் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், காலாவதியான மற்றும் சுகாதாரமற்ற முறையில் இருந்த சுமார் 20 கிலோ எடையுள்ள தின்பண்டங்கள் பறிமுதல் செய்தனர். மேலும் 4 கடைகளுக்கு அபராதம் விதித்தனர்.
Similar News
News November 17, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 17, 2025
ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்தில் தங்கள் உட்கோட்ட அதிகாரிகளை கீழ்காணும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம். ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.
News November 17, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, வீரப்பம்பாளையம், பழையபாளையம், குமலன்குட்டை, வெட்டுக்காட்டு வலசு, கருவில்பாறை, சூளை, முதலியார் தோட்டம், வில்லரசன்பட்டி சன் கார்டன் பகுதி, எம்.எல்.ஏ அலுவலகம் பின்புறம், அடுக்கம்பாறை, கந்தையன் தோட்டம், வி.ஜி.பி நகர், தென்றல் நகர், பாரதியார் நகர், ஐஸ்வர்யா கார்டன், நகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


