News June 14, 2024
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை

திண்டுக்கல் – திருச்சி ரோடு மேம்பாலம் அருகே கீர்த்தி கபே கடையில் இன்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த காலாவதியான பன், பிரட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் கடை உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இதுபோன்று காலாவதியான பொருட்கள் வைத்திருக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Similar News
News March 2, 2026
திண்டுக்கல்: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News March 2, 2026
திண்டுக்கல்: புதிய கட்சியை தொடங்கினார்! ஷாக்கில் திமுக

திண்டுக்கல் திமுக தெற்கு ஒன்றிய துணைச் செயலாளரும், தோட்டனூத்து ஒன்றிய கவுன்சிலருமான G.ராதாகிருஷ்ணன், திமுகவிலிருந்து விலகி ‘வெற்றி தமிழர் முன்னேற்ற கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நாளை மார்ச்-2.ம் தேதி திண்டுக்கல்லில் கட்சியின் பெயர் மற்றும் கொடி அறிமுக விழா நடைபெறுகிறது. ஆளுங்கட்சிப் பொறுப்பிலிருந்த ஒருவர் புதிய கட்சி தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 2, 2026
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரத்தில் மர்ம மரணம்!

ரெட்டியார்சத்திரம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படத்தில் உள்ள இந்நபரின் பெயர் அல்லது முகவரி குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


