News October 27, 2024
உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுவது கட்டாயம்

அரியலூர் மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்காலிக இனிப்பு பலகார கடைகள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
Similar News
News February 1, 2026
அரியலூர்: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

அரியலூர் மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News February 1, 2026
அரியலூர் ஒரு ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’

அரியலூர் மாவட்டம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. கடல் விலகியதால் ஏற்பட்ட மாற்றங்களைத் தொடர்ந்து, கடல் மற்றும் கடற்கரையிலே வாழ்ந்த பல்வேறு இனங்கள், சகதி மற்றும் சதுப்புநிலத்தில் மூழ்கி படிமங்களாகின. எனவே அரியலூர் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் ‘புவியியல் ஆராய்ச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க!
News February 1, 2026
அரியலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது: 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!


