News August 14, 2024
உடையார்பாளையம் : கம்பி வேலியை திருடிய மூவர் கைது

உடையார்பாளையம் அருகே மணகெதி கிராமத்தில் சுங்கச்சாவடிக்கு சொந்தமான 50 கிலோ எடை கொண்ட கம்பி வேலியை அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ், மணிகண்டன், கார்த்திகேயன் ஆகியோர் திருடி சென்றனர். அப்போது, உடையார்பாளையம் காவல் துணை ஆய்வாளர் ரமேஷ் பாபு ரோந்து சென்றார். அதை கண்ட மூவரும் இரும்பு கம்பியை அதே இடத்தில் போட்டுவிட்டு தப்பி சென்றனர். பின்னர், போலீசார் மூவரையும் கைது செய்தனர்.
Similar News
News November 8, 2025
அரியலூர்: 12th போதும்.. வங்கி வேலை!

அரியலூர் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
அரியலூரில் மாரத்தான் போட்டி

அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை எம்எல்ஏ-க்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் வயதின் அடிப்படையில் 17 முதல் 25 மற்றும் 25 க்கும் மேற்பட்ட என நான்கு பிரிவுகளில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
News November 8, 2025
அரியலூர்: முதியவரை தாக்கிய 3 பேர் கைது!

உடையார்பாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (60). விவசாயி. இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சுதாகருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் தேவேந்திரனை சுதாகர், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும் அவரது உறவினர் சுதா ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து வந்த புகாரின் பெயரில் சுதாகர் உட்பட 3 பேரையும் காவல்துறை கைது செய்தது.


