News August 6, 2025
உடையாம்பட்டியில் பிடிப்பட்ட 10அடி மலைப்பாம்பு

துவரங்குறிச்சி அடுத்த உடையாம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி. இவரது தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது தோட்டத்தின் அருகே சுமார் 10அடி நீளம் மலைப்பாம்பு ஒன்று இருந்தது. இதையறிந்த துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினர் சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்பு பாம்பு பிடிப்பான் உதவியுடன் மலை பாம்பினை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதை வனத்துறையினர் பாதுகாப்பு வனப்பகுதியில் விட்டனர்.
Similar News
News December 11, 2025
திருச்சி: பசுமை சாம்பியன் விருது விண்ணப்பிக்க அழைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பை செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு “பசுமை சாம்பியன்” விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.tnpcp.gov.in என்ற தளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் ஜனவரி 20-ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
திருச்சி: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

திருச்சி மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 10, 2025
திருச்சி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

திருச்சி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


