News December 15, 2025

உடுமலையில் பரபரப்பு: துரத்தி துரத்தி கொட்டிய தேனிக்கள்!

image

திருப்பூர் உடுமலையை கல்லாபுரம் ஊராட்சி வேல்நகரைச் சேர்ந்த கௌரி காலமானார். நேற்று மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக தேனீக்கள் பொதுமக்களை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த கர்ணன், மாரிமுத்து, சுந்தரபாண்டியன், மகுடீஸ்வரன் ஆகியோர் அதிக அளவில் பாதிக்கப்பட்டு, குமரலிங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Similar News

News December 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

திருப்பூர் மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <>க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News December 15, 2025

திருப்பூர் மாவட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன!

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 340 மனுக்களை அளித்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 15, 2025

திருப்பூரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் பலி!

image

திருப்பூர் 2-வது ரயில்வே கேட் பகுதியில், நேற்று மாலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்தவர் கருநீல நிற முழுக்கை சட்டையும், வெளிர் நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்திருந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!