News December 20, 2024
உடுமலையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்

உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில், அம்பேத்கரை அவமதித்து பேசியதாக கூறி, திமுக சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக நகரச் செயலாளர் வேலுச்சாமி மற்றும் நகர திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 23, 2025
திருப்பூர்: ஜீ.பே மூலம் ரூ.92,000 வழிப்பறி!

திருப்பூர்: பல்லடம், மாணிக்கபுரம் சாலைப் பகுதியில் இணையதள ஆப் மூலம் பழகிய வாலிபர்கள் காட்டுப்பகுதிக்கு கோடாங்கி பாளையம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை வரவழைத்து அவரிடம் இருந்த ரூ.92 ஆயிரம் பணத்தை ஜீ.பே மூலமாக பெற்றுக்கொண்டு அடித்து துரத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .இந்த வழக்கில் சபரி ராஜன்,நவீன், சந்திர பிரகாஷ், டேனியல் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
News August 23, 2025
காங்கேயம் சாலை விபத்தில் பெண் ஒருவர் பலி

திருப்பூர் மாவட்டம்: காங்கேயம் முத்தூர் சாலையில் வாகனத்தில் கோயிலுக்கு செல்லும்போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி பெண் ஒருவர் பலி அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கணவர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை காங்கேயம் முத்துர் சாலை சற்று பரபரப்பு ஏற்பட்டது.
News August 23, 2025
திருப்பூர் மாநகரில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

திருப்பூர் பகுதி மேம்பாட்டு கழகத்தினரால் விநியோகம் செய்யப்படும் பிரதான குடிநீர் குழாய்கள் மாற்றப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே வருகிற 28 மற்றும் 29 ஆகிய 2 நாட்களில், இத்திட்டத்தின் மூலம் பெறப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தண்ணீரை சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் அமீத் கூறியுள்ளார்.