News March 14, 2026

உச்சநீதிமன்ற நிர்வாகத்தை இனி AI கவனிக்கும்!

image

கடந்த 2022-ல் Ex SC CJI சந்திரசூட் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்ட ஒரு வழக்கு, தற்போது ஒரு புதிய அமர்வின் முன் மீண்டும் பட்டியலிடப்பட்டது சர்ச்சையானது. இதுகுறித்த விசாரணையில் SC-ன் பதிவகத்தில் உள்ள குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்தன. இதையடுத்து வழக்கு ஒதுக்கீடு & அமர்வுகளைத் தீர்மானிக்கும் பணிகளில் மனிதக் குறுக்கீட்டை நீக்கிவிட்டு, AI தொழில்நுட்பத்தை பயன்படுத்த CJI சூர்யா காந்த் முடிவெடுத்துள்ளார்.

Similar News

News April 6, 2026

BREAKING: கேஸ் சிலிண்டர்… அரசு புதிய அறிவிப்பு

image

நிரந்தர முகவரி இல்லாத புலம்பெயர் தொழிலாளர்கள், மாணவர்கள் இனி LPG கேஸ் பெற அட்ரஸ் Proof அளிக்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்குப் பதில், ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பித்து இந்த 5 கிலோ Free trade LPG (FTL) கேஸை பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த 5 கிலோ LPG கேஸை வீட்டு உபயோகத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 6, 2026

பிரேமலதா, துரைமுருகன், காந்தி வேட்புமனு தாக்கல்

image

காட்பாடியில் துரைமுருகன், ராணிப்பேட்டையில் அமைச்சர் <<19578964>>காந்தி<<>>, விருத்தாசலத்தில் பிரேமலதா, கோவை தெற்கில் செந்தில் பாலாஜி, குறிஞ்சிப்பாடியில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போடியில் ஓபிஎஸ், ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன், சிவகங்கையில் கருணாஸ், நாகையில் ஜவாஹிருல்லா, திருக்கோவிலூரில் கெளதம சிகாமணி, விருதுநகரில் விஜய பிரபாகரன் உள்ளிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

News April 6, 2026

டேட்டிங் APP.. கணவன், மனைவிக்கு தெரியாமல் உறவு!

image

இந்தியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டேட்டிங் APP-களின் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிலும் திருமணம் மீறிய உறவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வு கூறுகிறது. 65% ஆண்களும், 35% பெண்களும் என நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேர் டேட்டிங் APP-களை பயன்படுத்துகின்றனர். இதில், 18% உடன் பெங்களூரு முதலிடத்திலும், ஹைதராபாத் 17% உடன் 2-ம் இடம், டெல்லி 11% உடன் 3-ம் இடத்தில் உள்ளது.

error: Content is protected !!