News March 27, 2025
உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவர் பதவி நீக்கம்

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறையின் முதன்மைச் செயலர், உசிலம்பட்டி நகர்மன்றத் தலைவராக உள்ள க.சகுந்தலா உட்பட 4 பேரை பதவி நீக்கம் செய்துள்ளார். சட்ட வகைமுறைகளை மீறும் வகையில் செயல்படுவோரை நீக்க அரசுக்கு அதிகாரம் இருப்பதால் பதவி நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர்மன்றதலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 3, 2025
மதுரை மாவட்ட புறநகர் பகுதி இரவு ரோந்து காவலர்கள் விவரம்

மதுரை மாவட்டத்தின் புறநகர் பகுதியான திருமங்கலம், உசிலம்பட்டி,மேலூர், சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 06 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மதுரை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொது மக்கள் தங்கள் தேவைக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 2, 2025
‘கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டம் தேவை’

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சண்முகம் பேட்டியளித்துள்ளார். அதில், கச்சத்தீவு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கில் சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் உயிர், உடைமை பாதுகாக்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது என்றார்.
News April 2, 2025
மதுரை: ஒரே மேடையில் சாலமன் பாப்பையா மற்றும் சசிகுமார்

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாடு நடைபெற்று வருகிறது. முதல் நாள் கலை நிகழ்வில் ஆசிரியர் சாலமன் பாப்பையா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வருகிறார். சிறப்பு விருந்தினராக இயக்குனரும் நடிகருமான சசிகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக காலையில் கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.