News March 18, 2025
உங்க வீட்டுல குழந்தைகள் இருக்கா! மிஸ் பண்ணிடாதீங்க

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக விட்டமின் ஏ சத்து குறைபாடு நோய்களைகளையும் மாலை கண் தொடர்பான நோய்களை தடுப்பதற்கும் விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் மார்ச் 17 – 22 வரை 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்பட உள்ளது. அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகள் வைத்திருப்பவர்களுக்கு இதை Share பண்ணுங்க
Similar News
News March 18, 2025
திருவள்ளூரில் வெளிநாட்டு பல்கலை கிளை

திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுசார் நகரில் லண்டன் டைம்ஸ் உயர் கல்வி நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கிளை அமைப்பது தொடர்பாக இன்று தொழிற்துறையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அறிவுசார் நகரத்தை அமைப்பதற்காக கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய கிராமங்களில் 870 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தப்பட உள்ளன.
News March 18, 2025
நாய் கடி சிகிச்சைக்கு, நிதி உதவி கேட்கும் பெற்றோர்

ஆர்.கே.பேட்டை அருகே ஶ்ரீ கிருஷ்ணாபுரம் (முரகுப்பம்) கிராமத்தில் நேற்று இரவு, இந்த கிராமத்தில் வசிக்கும் பழனி என்பவரின் குழந்தை வெற்றிவேலை வெறி நாய் கடித்ததில் படுகாயம் அடைந்தார். தற்போது சி.எம்.சி மருத்துவமணையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.சி.எம்.சியில் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது. கூலி வேலை செய்யும் குழந்தை பெற்றோர் நிதி உதவி கேட்டுள்ளனர்.
News March 18, 2025
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்திய இருவர் சிக்கினர்

திருத்தணியில் கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர். நேற்று மாலை திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தில் போலீசார் சோதனை செய்தனர். இருவரின் உடைமைகளில் சோதனை செய்தபோது, 11 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், ராயபுரத்தைச் சேர்ந்த அஜீஸ் மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த தினேஷ் என்பது, இவர்கள் ஒடிசாவிலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.