News April 7, 2025
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட முகாம் காளையார்கோவில் வட்டம் பரமக்குடி மெயின் ரோடு வெள்ளையம்பட்டி பாஸ்டின் நகரில் அமைந்துள்ள A.S.கார்டன் மஹாலில் வரும் 16ஆம் தேதி பிற்பகல் 04 மணி முதல் 06 மணி வரை நடைபெற உள்ளது. முகாமில் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 7, 2025
அங்கன்வாடி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில், காலியாகவுள்ள 2 முதன்மை அங்கன்வாடி பணியாளர், 2 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 29 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்து, காலிப்பணியிட குழந்தை மையம் அமைந்துள்ள வட்டாரம் / திட்டம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வரும் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News April 7, 2025
சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளர் ( SUPERVISOR ) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இங்கே <
News April 7, 2025
போதைப்பொருட்கள் விற்பனை செய்த 2 பேர் கைது

தேவகோட்டை காட்டூரணியைச் சேர்ந்த மர்ஸ்க் அலி (24) மற்றும் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த காதர் மைதீன் (21) ஆகிய இருவரும் திருப்பத்தூர் சாலையில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்க்கின்றனர். இந்த கடைக்கு இளைஞர்கள் அதிகம் வந்து சென்றுள்ளனர். இதனை பயன்படுத்தி இருவரும் கூலிப் எனும் போதை பொருளை விற்பனை செய்துள்ளனர். போலீசார் இருவரையும் நேற்று கைது செய்து இரண்டரை கிலோ கூலிப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.