News May 7, 2024
உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ நிகழ்வு

மொடக்குறிச்சி அடுத்த துய்யம்பூந்துறை ஊராட்சியில் உள்ள மாதேஸ்வரன் நகர் பகுதியில், நான் உங்களுடன் உங்கள் எம்.எல்.ஏ எனும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்களை, மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ சரஸ்வதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின் பொது மக்களின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்றார்.
Similar News
News January 30, 2026
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.31) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, சிவகிரி, வேட்டுவபாளையம், விளக்கேத்தி, காஸ்பாபேட்டை, வீரப்பம்பாளையம், செட்டிபாளையம், எழுமாத்தூர், மொடக்குறிச்சி, 68,80 வேலாம்பாளையம், பவானி நகர், ஊராட்சிக்கோட்டை, மைலம்பாடி, காளிங்கராயன்பாளையம், கூடுதுறை, சத்தி, பேருந்து நிலையம், உக்கரம், அரியப்பம், சிக்கரசம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News January 30, 2026
ஈரோடு: ரூ.20 தந்தால் ரூ.2 லட்சம் கிடைக்கும்!

ஈரோடு மக்களே உங்களுக்கு ரூ. 2 லட்சம் காப்பீடு வழங்க மத்திய அரசின் பிரதான் மந்திரி சுரக்ஷா பீம யோஜனா திட்டம் அமலில் உள்ளது. இதற்கு ஆண்டிற்கு ரூ.20 மட்டும் செலுத்தினால் போதும். வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான படிவத்தை இங்கே <
News January 30, 2026
ஈரோடு: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

ஈரோடு மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


