News September 19, 2025
ஈரோட்டில் 5 பேர் கைது: போலீஸ் அதிரடி

ஈரோடு: பெருந்துறை அடுத்துள்ள மூங்கில் பாளையத்தில் பரமேஸ்வரன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் நடைபெறுவதாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது 5 பேர் பண வைத்து சூதாடியது தெரிந்தது. இதில் பரமேஸ்வரன், பாஸ்கரன் ,சீனாபுரம் கிருஷ்ணன், நாகராஜ் கொட்டாம்புலியூர் அசோக், பெருமாநல்லூர் சின்னச்சாமி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News September 19, 2025
ஈரோடு: ரயில் டிக்கெட் எடுப்பது இனி ஈசி!

ஈரோடு மக்களே.., ரயிலில் டிக்கெட் புக் செய்ய ஏற்கனவே பல செயலிகள் உண்டு. இந்நிலையில், முன்பதிவில்லா ரயில் டிக்கெட், ரயிலில் உணவு உட்பட அனைத்து இதர சேவைகளுக்கும் ‘<
News September 19, 2025
ஈரோடு: வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை!

ஈரோடு: சிவகிரி அடுத்த அஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (31). கோழிக்கடையில் வேலைபார்த்து வந்த இவருக்கு கடந்த 16ஆம் தேதி கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும், வலி சரியாகவில்லை எனத் தெரிகிறது. இதனால் வீட்டில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News September 18, 2025
ஈரோடு இன்று இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் கொலை கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகிறது. மேலும் ஈரோட்டில் முக்கிய பகுதிகளான பவானி, கோபி. சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சி பகுதிகள் காவல் துறை அதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. மேலும் கஞ்சா புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனை தடுக்கப்படுகிறது.