News October 26, 2024
ஈரோட்டில் ரூ.90,000 மோசடி: இருவர் கைது

கொங்கம்பாளையத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (46). இவரின் பஜாஜ் இஎம்ஐ கார்ட் மூலம் ரூ.90,000க்கு பொருட்கள் வாங்கியதாக செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளது. எனவே, அதிர்ச்சியடைந்த வேளாங்கண்ணி, கடந்த 19ஆம் தேதி ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, மோசடி செய்த பஜாஜ் நிறுவன இஎம்ஐ ஊழியர் கமலக்கண்ணன் (23) மற்றும் முன்னாள் ஊழியர் சுகந்த் (23) ஆகிரோரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 13, 2025
ஈரோட்டில் பதிவு செய்தால்: நஷ்டம் இல்லை APPLY NOW !

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு காரீப் – 2025 பருவத்தின் பயிர் காப்பீடு வழங்கப்படுகிறது. அதற்கு ஹெக்டருக்கு ரூ.300 முதல் பிரீமியத் தொகை செலுத்தி ரூ.30,000 வரை பயிர் இழப்பீடு பெறலாம். மேலும் செப்.16 க்குள் அரசு பொது சேவை மையங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பதிவு செய்து கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அறிவித்தார்.
News August 13, 2025
திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

அந்தியூர் குருநாதசாமி ஆடித் தேர் திருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். குதிரை சந்தையும் பார்வையிட்டார். அவருக்கு அஇஅதிமுகவின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
ஈரோடு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

ஈரோடு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <