News September 7, 2025
ஈரோட்டில் புதிய மாவட்டம் உருவாக்க தீர்மானம்

சத்தியமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி பவானிசாகரில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் பொதுநல அமைப்புகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய மாவட்டம் உருவாக்க வலியுறுத்தி கருத்துக்களை திரட்டி பொதுமக்கள் கையொப்பத்துடன் அரசுக்கு கோரிக்கை வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Similar News
News September 7, 2025
ஈரோடு: தங்கம், பணம் தந்து இலவச திருமணம்!

ஈரோடு, வைரபாளையம், காவேரிகரையில், அறநிலையத்துறையின் கீழ் அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோவிலில், சட்டப்பேரவை அறிவிப்பு (2025-26) எண் 1-ன் படி, ஏழை எளிய இந்து மக்கள் பயன்பெறும் வகையில் திருக்கோயில் மூலம் ரூ.70,000 (4 கிராம் தங்கம் உட்பட) திட்ட செலவில் திருமணம் நடத்தப்பட உள்ளது. இத்திட்டப்படி திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் திருக்கோயில் அலுவலகத்தை அணுகலாம். SHARE பண்ணுங்க.!
News September 7, 2025
ஈரோடு : PHONE காணாமல் போனால் இதை செய்யுங்க!

ஈரோடு மக்களே உங்க Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News September 7, 2025
கோவை ஒபிஸ் ஆதரவாளர்கள் செங்கோட்டையனுக்கு ஆதரவு

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பில் இருந்து விடுவித்தார். அதனை தொடர்ந்து இன்று கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்தில் கோவையை சேர்ந்த ஒபிஸ் அணியினர் மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் 2500கும் மேற்பட்டோர் செங்கோட்டையனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.மேள தாளங்களுடன் வந்து அவரை சந்தித்தது குறிப்பிடதக்கது.