News March 29, 2024

ஈரோட்டில் நீர்மட்டம் 53 அடியாக சரிவு

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணையாகும். இதன் மொத்த நீர்மட்ட உயரம்
105 அடி, கொள்ளளவு 32.8 டிஎம்சி ஆகும். இந்நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 53.32 அடி, நீர் இருப்பு 5.27 டி.எம்.சி, நீர் வரத்து வினாடிக்கு 27 கன அடியாக உள்ளது . மேலும் பாசனம் மற்றும் குடிநீருக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Similar News

News February 8, 2026

ஈரோடு அருகே சோகம்: ஒருவர் பலி

image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், சீரகல்லி வனச்சரக ரங்கசாமி கோயில் பகுதியில் வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை, கரளவாடியில் உள்ள விவசாயத் தோட்டத்திற்குள் புகுந்தது. அங்கு காவலில் இருந்த மகேஷ் (28) என்ற இளைஞரை யானை மிதித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 8, 2026

அந்தியூர் அருகே வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் மலைப்பாதை காவல் நிலையம் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைசூரிலிருந்து வந்த பேருந்தை நிறுத்தி சோதனை செய்தபோது, அந்தியூர் செம்புளிச்சாம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் (33) என்பவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

News February 8, 2026

ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

image

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098

error: Content is protected !!