News March 19, 2024
ஈரோட்டில் நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ஆம் தேதி தொடங்குகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகம் ஆகிய 2 இடங்களில் நடக்கிறது. பகல் 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Similar News
News October 17, 2025
ஈரோடு மக்களே தீபாவளி அன்று ஜாக்கிரதை!

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அதில், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெற்றோர் அல்லது முதியவர்கள் முன்னிலையில் வெடிப்பது நல்லது. தீ பற்றவைத்த பட்டாசுகளிடமிருந்து இடைவெளிவிட்டு நிற்கவும். பட்டாசு வெடிக்கும் போது முன்னெச்சரிக்கையாக ஒரு வாளி தண்ணீரை அருகில் வைத்துக் கொள்ளுங்கள் என அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஈரோடு மாவட்ட காவல் இரவு ரோந்து அதிகாரிகளின் பட்டியல்

ஈரோடு மாவட்டம் காவல்துறை சார்பாக இன்று 16/10/2025 இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரி அவர்களின் பெயர் பட்டியல். அவசர உதவிக்கு டயல் 100 மற்றும் சைபர் கிரைம் 1930 குழந்தைகள் உதவி எண் 1098 அவசர உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும் காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஈரோடு மாவட்டத்தின் இன்றைய முக்கிய செய்திகள்

1)ஈரோடு அருகே நள்ளிரவில் ஒன்றரை வயது பெண் குழந்தை கடத்தல்,
2)பர்கூரில் 500 கிலோ குட்கா கடத்திய ஒருவர் கைது,
3)சென்னிமலை அருகே ரேசன் பொருள் கடத்தல், போலீஸ் விசாரணை,
4) தாளவாடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தரமற்ற பேருந்துகள்.
5) முக்கிய பகுதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியது.