News October 22, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, காஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், குற்றிக்காரன்பாளையம், வேலாங்காட்டு வலசு, நஞ்சை ஊத்துக்குளி, டி.மேட்டுப்பாளையம், அணைக்கல் பாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், கருந்தேவன் பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளயம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம், காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News October 22, 2025
ஈரோடு: ரூ.35,000 சம்பளத்தில் ரயில்வே வேலை!

ஈரோடு பட்டதாரிகளே, உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள ‘Ticket Supervisor’, ‘station master’, ‘clerk’ போன்ற பல்வேறு பணிகளில் 5810 காலியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.35,400 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இங்கே <
News October 22, 2025
ஈரோட்டில் வெளுக்கப்போகும் மழை!

வடகிழக்குப்பருவமழை முன் கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, ஈரோடு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News October 22, 2025
ஈரோடு அருகே தூக்கிட்டு தற்கொலை!

தருமபுரி, கெண்டைநல்லி, காவக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன்,35, தனது மனைவி ராஜேஸ்வரி, 2 குழந்தைகளுடன் சென்னிமலை, 1010 நெசவாளர் காலனியில் வசித்து கொண்டு லாரி டிரைவராக வேலை பார்க்கிறார். முருகனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து தற்கொலை செய்வதாக அடிக்கடி கூறி வந்தவர், நேற்று இரவு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.