News November 19, 2025

ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

image

சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், பெரியசடையம்பாளையம் முத்தம்பாளையம், சிப்காட், சின்ன (ம) பெரிய வேட்டுவபாளையம், மோளகவுண்டன்பாளையம், போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், மேக்கூா், பெருந்துறை மேற்குப்பகுதி, கோவை சாலை, சின்ன(ம) பெரியமடத்துபாளையம், உட்பட பல ஆகிய பகுதிகளில் நாளை நவ.20 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது

Similar News

News November 19, 2025

அந்தியூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சிந்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், இருசக்கர வாகனத்தில் அந்தியூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பிரம்மதேசம் பெட்ரோல் பங்க் அருகே, ராஜ்குமார் என்பவர் வாகனம் மோதி பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 19, 2025

ஈரோடு: கஞ்சா சாக்லெட்டு கடத்தியவர் கைது!

image

ஈரோடு மதுவிலக்கு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிராணி தலைமையிலான காவல்துறையினர், ஈரோடு ரயில் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா சாக்லெட்டுகளை கடத்தி வந்ததாக பீகார் மாநிலத்தை சேர்ந்த மதன்குமார் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். 

News November 18, 2025

ஈரோடு இரவு ரோந்து காவலர் விபரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்.100 க்கும், சைபர் கிரைம் எண். 1930 க்கும், குழந்தைகள் உதவி எண். 1098 எண்களும், கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!