News November 16, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, பேரோடு, கங்காபுரம், கொங்கம்பாளையம், மொக்கையம்பாளையம், சடையம்பாளையம், கவுண்டம்பாளையம், சூரிப்பாறை, ஆலுச்சாம்பாளையம், தளவாய்பேட்டை, ஒரிச்சேரி, வைரமங்கலம், ஜம்பை, சலங்கபாளையம், பெரிய, சின்ன மோளபாளையம், திப்பிசெட்டிபாளையம், பருவாச்சி, துருசாம்பாளையம், புன்னம், எலவமலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News November 16, 2025
ஈரோடு: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

ஈரோடு மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News November 16, 2025
ஈரோடு அருகே வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி!

சேலம் மாவட்டம், சித்தூர் மக்கள் காட்டைச் சேர்ந்தவர் வெங்கடேசன் வயது 36. அரச்சலூர் அருகே நாச்சிவலசில் மூர்த்தி என்பவரிடம், ஜேசிபி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். அரச்சலூர் அருகே சில்லாங்காட்டு வலசில், எல்பிபி வாய்க்காலில் வெங்கடேசன் நேற்று முன்தினம் மாலை குளித்தார். அப்பொழுது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். சென்னிமலை அருகே சேமலபாளையத்தில் மிதந்த உடலை, தீயணைப்புத் துறையினர் நேற்று மாலை மீட்டனர்.
News November 16, 2025
ஈரோட்டில் வசமாக சிக்கிய திருடன்!

ஈரோடு தொப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் வெளியே லாரியை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது அதிகாலை 3 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, லாரியில் இருந்த பேட்டரியை சக்திவேல் என்பவர் கழட்டி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மடக்கிப்பிடித்து பவானிசாகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


