News September 8, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செப்.9) காலை 9 மணி முதல், மாலை 5 மணி வரை, புன்செய்புளியம்பட்டி, மாதம்பாளையம், கள்ளிபாளையம், டாணாபுதூர், ஆலத்தூர், காராப்பாடி, பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம், நல்லூர், செல்லம்பாளையம், தாசம்பாளையம், ஆலம்பாளையம், கணுவக்கரை மற்றும் ஆம்போதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 9, 2025
மாவட்டத்தில் நாளை முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’முகாம்

ஈரோடு மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை முதல், 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் காலை, 9 முதல் மதியம், 3 மணி வரை நடக்க உள்ளது. இதன்படி நாளை, ஈரோடு சாஸ்திரி நகர், அன்னபூரணி மஹால், பெருந்துறை – விஜயபுரி ஆர்த்தி மஹால், வரும், 11 ல் ஈரோடு மாநகராட்சி மண்டலம் – 2 ல் நகராட்சி பிரதான சாலை,
சூரம்பட்டி 4 ரோடு, வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகம், உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடக்க உள்ளது.
News September 9, 2025
ஈரோடு பேருந்து நிலையம் அருகே பரபரப்பு!

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு எதிர்புறத்தில் உள்ள கழிவு நீர் செல்லும் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தலையில் காயத்துடன் அடையாளம் தெரியாத நிலையில் மீட்பு. ஈரோடு டவுன் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
News September 9, 2025
ஈரோடு: முக்கிய அறிவுப்பு மின்சாரத் துறை

ஈரோடு,மின் பயனீட்டாளர்களின் மாதாந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் செப்.10 நாளை
காலை 11 மணிக்கு ஈரோடு தெற்கு கோட்ட அலுவலகத்தில் (948 EVN ரோடு,ஈரோடு-9) நடைபெறும். எனவே தெற்கு கோட்டத்திற்குட்பட்ட சோலார், கணபதிபாளையம், கொடுமுடி, சிவகிரி, அரச்சலுார், எழுமாத்துார், மொடக்குறிச்சி, அனுமன்பள்ளி, முள்ளாம்பரப்பு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம். SHAREit