News May 3, 2024
ஈரோட்டில் கனமழைக்கு வாய்ப்பு!

ஈரோட்டில் அடுத்த 4 நாட்களுக்கு (மே.6) இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்தில் மே.7 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரோட்டில் உட்சபட்ட வெப்ப அலையின் தாக்கம் இருந்து வந்த நிலையில் இச்செய்தியைத் தெரிவித்துள்ளது.
Similar News
News December 19, 2025
ஈரோடு: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை! APPLY NOW

ஈரோடு மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.<
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!
News December 19, 2025
JUSTIN: ஈரோடு அருகே விபத்து: ஒருவர் பலி!

ஈரோடு, சென்னிமலை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் நேற்று முந்தினம் இரவு, சென்னிமலை ஊத்துக்குளி சாலையில் ஓரமாக நின்றுள்ளார். அப்போது ஊத்துக்குளி திசையிலிருந்து சென்னிமலை நோக்கி அதிவேகமாக வந்த கார், முத்துசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முத்துசாமி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 19, 2025
ஈரோட்டில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

ஈரோட்டில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.20) காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை, ஈரோடு நகர், பஸ் ஸ்டேண்ட், வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், பெருந்துறை சாலை, மேட்டூர் சாலை, பெரியவலசு, பவானி நகர், காளிங்கராயன்பாளையம், ஊராட்டிக்கோட்டை, கூடுதுறை, வி.மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம், பேருந்து நிலையம், ரங்கசமுத்திரம், சிக்கரசம்பாளையம், உக்கரம், செண்பகபுதூர் பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.


