News August 21, 2025
ஈரோட்டில் இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சமூக நலத்துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆவணங்களுடன் இ-சேவை மையத்தை அணுகலாம். கூடுதல் தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு கலெக்டர் கந்தசாமி தெரிவித்தார். SHARE பண்ணுங்க!
Similar News
News January 25, 2026
ஈரோடு: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், ஈரோடு மாவட்ட மக்கள் 04242210898 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News January 25, 2026
ஈரோடு: 10th போதும் அரசு வேலை APPLY NOW

ஈரோடு மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
News January 25, 2026
நம்பியூர் அருகே சோகம்: தீயில் கருகிய 6 உயிர்கள்!

நம்பியூர் அடுத்த கொன்னமடை பகுதியில் செல்லப்பன் என்பவரது வீட்டுத் தோட்டத்திலிருந்த மாட்டுக்கொட்டகையில் மின்கசிவு காரணமாகப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 5 வெள்ளாடுகள் மற்றும் 1 மாட்டுக்கன்று தீயில் கருகி உயிரிழந்தன. மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.இது குறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


